குஜராத்தில் இன்று கன அல்லது மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
குஜராத்தில் கன அல்லது மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி: குஜராத்தில் இன்று கன அல்லது மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் குஜராத்தின் பல பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதேபோல் கோவா, கொங்கன் உள்ளிட்ட பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ஒடிசா, சவுராஷ்டிரா, மத்திய மகாராஷ்டிரா, தெலுங்கானா, கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
உத்தரகாண்ட், மேற்கு மத்திய பிரதேசம்இ விதர்பா, கடலோர ஆந்திரா, வடக்கு உள் கர்நாடகாக, மற்றும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 19 ஆம் தேதி வட வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
அடுத்த 5, 6 நாட்களுக்கு தென் மேற்கு பருவமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில குஜராத்தில் கன மற்றும் மிக கனமழை பெய்துள்ளது. உத்தரகாண்ட், கிழக்கு ராஜஸ்தான், கொங்கன், கோவா, அசாம், மேகாலயா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு