கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்
Recommended Video
டெல்லி: தென்மேற்கு பருவமழை சற்று மிதமாக மாறியுள்ளது. அதேநேரம், அசாம், மேகாலயாவில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும்.
இந்திய வானிலை இலாகா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு லிமிட் பருவமழை (என்எல்எம்) தாக்கம், மும்பை, தானே, அகமது நகர், அம்ரோடி, கோன்டியா, கட்டாக், கோலாபரா மற்றும் பக்தோக்ரா பகுதிகளில் இருக்கும்.
அதேநேரம், அசாம் மற்றும் மேகாலயாவில், கன அல்லது மிக கன மழை பெய்ய கூடும். கடலோர கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. தெற்கு உள் கர்நாடக பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்ப்புள்ளது. தமிழகம், திரிபுரா மாநிலங்களில் ஒருசில இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இடி மற்றும் புழுதி காற்று தமிழகம், பீகார், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கர்நாடகா, கேரளா, தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான் கடல் பகுதியில் காற்று பலமாக வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு