வட இந்தியாவுக்கு வந்தது தென்மேற்கு பருவமழை: அடுத்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மழை
அடுத்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மழை பெய்யும்.
Recommended Video
டெல்லி: தென்மேற்கு பருவமழை வடஇந்தியாவை அடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மும்பையில் கடந்த சில தினங்களாக வெளுத்து வாங்கிய மழை பெய்தது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இன்று முதல் 30-ஆம் தேதி வரை டெல்லியில் பெய்யும். இதேபோல் ஒடிஸா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட, மகாராஷ்டிரம், குஜராத் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பெய்யும்.
ஹரியாணா, சண்டீகர், டெல்லி, கிழக்கு ராஜஸ்தான், கிழக்கு உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. ஜம்மு- காஷ்மீர் மற்றும் பஞ்சாபிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான், மேற்கு உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு