ஏபிபி சர்வே: சிவசேனா கைவிட்டால் பாஜக காலி... மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு ஏறுமுகம்!
நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் சட்டிஸ்கரில் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது.
Recommended Video
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் மகாராஷ்டிராவிலும், சட்டிஸ்கரிலும் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது.
பிரபல ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. தேசத்தின் மனநிலை என்ற பெயரில் சர்வே நடத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்தும் இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது.
மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கை ஓங்குகிறது.
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிவசேனா விலகினால் பாஜகவுக்கு ஆபத்து ஏற்படும். சிவசேனா விலகினால் காங். கூட்டணிக்கு 30 தொகுதிகள் கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு 16 சீட் கிடைக்கும். சிவசேனாவுக்கு 2 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
பாஜக சிவசேனா கூட்டணி வைத்தால் அந்த கூட்டணி 36 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 12 இடங்களும் கிடைக்கும்.
மேலும் சட்டிஸ்கரில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது.
அதன்படி சட்டிஸ்கரில் பாஜக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 11 லோக்சபா இடங்களில் பாஜக 9 இடங்களில் வெல்லும்.