நிதீஷ் புண்ணியத்தால் பீகாரில் லாபமடையும் பாஜக .. ஏபிபி சர்வே
Recommended Video
டெல்லி: ஏபிபி - சிஎஸ்டிஎஸ் இணைந்து நடத்திய Mood of the Nation சர்வேயில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக கடுமையான செல்வாக்கு இழப்பை சந்தித்து வருவது தெரியவந்துள்ளது. அதேநேரம், பீகாரில் அக்கட்சி கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.
சர்வேயில் கூறியிருப்பதாவது: பீகாரில் 60 சதவீதம் வாக்கு வங்கி ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதாதள கூட்டணிக்கு உள்ளது. அங்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணிக்கு 34 சதவீத வாக்குகள்தான் கிடைக்கும் என்கிறது சர்வே. பிற கட்சிகளுக்கு 6 சதவீத வாக்கு வங்கி உள்ளதாகவும் இந்த சர்வே கூறுகிறது.
ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி வைத்து ஐக்கிய ஜனதாதளம் கட்சி, ஆட்சியமைத்தது. நிதீஷ்குமார், முதல்வராக பதவி வகித்தார். ஆனால், பாதியில் அந்த கூட்டணியை கழற்றிவிட்டு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வட மாநிலங்கள் பலவற்றிலும் பாஜகவிற்கு செல்வாக்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.