தீவிரவாத அச்சுறுத்தல்... சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
கார்த்திகை தொடங்கி தை மாதம் வரை கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறும். இதனையொட்டி நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு புனித யாத்திரை சென்று ஐயப்பனை தரிசனம் செல்வது வழக்கம். இதனிடையே கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து சபரிமலையில் நடைதிறக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு வரத்துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன்கோவில் அமைந்துள்ள பகுதியிலும், பம்பையிலும் கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐயப்பன் கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் 160 பேர் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.