மகனைக் காக்க “கல்லீரல் தானம்”– மைசூரில் ஒரு பாசமான அம்மா!
பெங்களூர்: மகனின் உயிரைக் காப்பாற்ற தனது கல்லீரலின் ஒரு பகுதியை உறுப்பு தானம் செய்துள்ளார் மைசூரை சேர்ந்தவர் பிரிரானா என்ற அன்பான அம்மா.
பிரிரானாவின் மகன் ஸ்ரேயாஸ், கடந்த 2 மாதங்களாக கடுமையான வயிற்று வலியால்ஹ்h அவதிப்பட்டு வந்தார்.
மைசூர் நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும், ஸ்ரேயாஸ்க்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாக கண்டறிய முடியவில்லை.
மருத்துவமனையில் அனுமதி:
அதைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் பெங்களூரில் உள்ள பிஜிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லீரலில் நச்சு நீர்
அங்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்த மருத்துவர்கள் சிறுவனின் கல்லீரல் பாதிக்கப்பட்டு, வயிற்றின் அடிப்பகுதியில் நச்சுநீர் கசிவதையும் கண்டறிந்தனர்.
தாமதமான அறுவை சிகிச்சை:
உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடுகள் நடந்தது. இருப்பினும் ஸ்ரேயாஸ்க்கு பொருத்த மான கல்லீரல் கிடைக்காததால், அறுவை சிகிச்சை தாமதமானது.
தாய் செய்த தானம்:
சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக தொடங்கியது. இந்நிலையில் அவரது தாய் பிரிரானா தனது கல்லீரலை தானமாக வழங்குவதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
70 சதவீத ஆரோக்கியம்:
இருப்பினும் உயிருடன் இருக்கும் போது கல்லீரல் தானமாக வழங்க வேண்டும் என்றால் அவர்கள் குறைந்தபட்சம் 70 சதவீத உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை:
பிரிரானாவுக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததால் அவரது கல்லீரலை ஸ்ரேயாஸ்க்கு பொருத்த மருத்துவர்கள் முன்வந்தனர்.
மனரீதியான அறிவுரைகள்:
மேலும் அவருக்கு மனரீதியான அறிவுரைகளும் வழங்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை 10 மணி நேரம் நடந்தது. பிரிரானாவின் கல்லீரலில் இருந்து 50 சதவீதம் பெறப்பட்டு, ஸ்ரேயாஸ்க்கு பொருத்தப்பட்டது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி:
அறுவை சிகிச்சை முடிந்து இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தாய் மற்றும் மகன் இருவரும் நலமாக உள்ளனர் என்றார்.
மகனின் உடல்நலம் முக்கியம்:
அறுவை சிகிச்சைக்கு பின்னர் பேசிய பிரிரானா, "எனது உடல்நலத்தை காட்டிலும் எனது மகனின் உடல்நலம் எனக்கு மிகவும் அவசியம். அவன் அவதிப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை.
மகிழ்ச்சியில் தாய்:
டாக்டர்கள் எனது கல்லீரலை பொருத்த முடிவு செய்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என் வாழ்க்கையை காட்டிலும் எனது மகனின் வாழ்க்கை மிகவும் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.