பெண் பத்திரிகையாளர்கள் அவ்வளவு அப்பாவியா.. பாஜக மகளிர் அணி தலைவர் குசும்பு!
போபால்: ஒருவர் வந்து அவர்களை தவறாக பயன்படுத்தும் அளவுக்கு பெண் பத்திரிகையாளர்கள் அப்பாவிகளாக இல்லை என்று கருதுகிறேன் என்று மத்தியப் பிரதேச மாநில பாஜக மகளிர் அணித் தலைவர் லதா கெல்கர் கூறியுள்ளார்.
லதா கெல்கரின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பெண் பத்திரிகையாளர்களை கிண்டலடிப்பது போல பேசியுள்ளதாகவும் சர்ச்சை வெடித்துள்ளது.
மத்திய அமைச்சரும், முன்னாள் பத்திரிகையாளருமான எம்.ஜே. அக்பர் மீது பல பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் அத்துமீறல் புகார்களைக் கூறியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்பர் விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
#WATCH: I welcome this #MeToo campaign but I don't consider women journalists to be so innocent that anyone can misuse them, says Lata Kelkar, Chief of Madhya Pradesh BJP women wing on MJ Akbar. (11.10.18) pic.twitter.com/4gM5shTkg3
— ANI (@ANI) October 12, 2018
இந்த நிலையில் லதா கெல்கரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த லதா கெல்கர், மீ டூ பிரசாரத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் ஒரு ஆண் தன்னை தவறாகப் பயன்படுத்துவதைக் கூட தடுக்க முடியாத அளவுக்கு பெண் பத்திரிகையாளர்கள் இல்லை என்று நான் கருதுகிறேன் என்று நக்கலாக பதிலளித்தார் லதா கெல்கர்.
இதன் மூலம் அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கிடமானவை என்று மறைமுகமாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.