மோடிக்கு திருமணமானதா யார் சொன்னது.. அவரு பேச்சுலர்ங்க.. ஆனந்திபென் புது தகவல்
மோடிக்கு திருமணமாகவில்லை என்ற மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென்னின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
போபால்: குஜராத்தின் முன்னாள் முதல்வரும் மத்தியப் பி்ரதேச ஆளுநருமான ஆனந்தி பென், பிரதமர் மோடிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா மாவட்டத்தில் உள்ள திமரி அங்கன்வாடி மையத்தில் நேற்று திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆனந்திபென் இந்தியில் பேசிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், "நரேந்திர மோடிக்கு திருமணமாகவில்லை. இருப்பினும் அவர் குழந்தைப்பேறு காலத்துக்கு முன்பான பெண்கள், மகப்பேறுக்கு பின்பான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை புரிந்துகொண்டுள்ளார்." என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் ஆனந்திபென்னுடன் பாஜக எம்.எல்.ஏ. சஞ்சய் ஷாவும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
2014 ஆம் ஆண்டு மோடி பிரதமரான பிறகு அவருடைய திருமணம் பற்றி பொதுவெளியில் அதிக அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் தேர்தல் பிரமானப்பத்திரத்தில், அவர் 1968 ஆம் ஆண்டு ஜஷோடாபென் என்பவரைத் திருமணம் செய்துகொண்டதைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆளுநர் ஆனந்திபென் பிரதமர் மோடிக்கு திருமணம் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.