For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடிதத்தில் பிழை.. முத்துக்கருப்பன் ராஜினாமாவை நிராகரித்தார் வெங்கையா

காவிரி விவகாரத்தில் அதிமுக எம்பி முத்துகருப்பன் இன்று ராஜினாமா செய்யவுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக எம்.பி.,முத்துக்கருப்பன் ராஜினாமா கடிதம் நிராகரிப்பு..ராஜினாமா இல்லை

    டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது எம்பி பதவியை முத்துகருப்பன் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளித்த நிலையில் அவர் அதை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த அவகாசம் கடந்த 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு இதுவரை வாய்திறக்காமல் இருந்தது. இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்பியான முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடந்த 30-ஆம் தேதி டெல்லியில் அறிவித்தார்.

    ராஜினாமா கடிதம்

    ராஜினாமா கடிதம்

    டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத போது எனக்கு எதற்கு பதவி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜ்யசபா தலைவரான துணை குடியரசு தலைவரிடம் அடுத்த வாரம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளதாகவும் முத்துக்கருப்பன் தெரிவித்திருந்தார்.

    கேட்க மாட்டேன்

    கேட்க மாட்டேன்

    முதல்வரும், துணை முதல்வரும் தனக்கு சகோதரர்கள் போன்றவர்களி என்றாலும் ராஜினாமா விவகாரத்தில் நான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    முத்துகருப்பன் ராஜினாமா

    முத்துகருப்பன் ராஜினாமா

    டெல்லியில் மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணை தலைவருமான வெங்கய்ய நாயுடுவுக்கு முத்துகருப்பன் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். பொதுவாக ராஜினாமா செய்வது என்பது உடல் நல பாதிப்பு, தனிப்பட்ட காரணங்களுக்காக இருந்தால் மட்டுமே ஏற்கப்படும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக ராஜினாமா கடிதம் ஏற்கப்படாது என்பது மரபு. எனவே முத்துகருப்பனின் ராஜினாமா கடிதத்தை வெங்கையா நாயுடு ஏற்கவில்லை.

    ராஜினாமா இல்லை

    ராஜினாமா இல்லை

    எனினும் ராஜினாமா கடிதத்தை ஏற்கும் வகையில் வலுவான காரணங்களை கூறி மறுபடியும் ராஜினாமா செய்ய வாய்ப்புகள் உள்ளன. ராஜினாமா கடிதம் ஏற்க மறுக்கப்பட்டது குறித்து முத்துகருப்பன் கூறுகையில், காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 9-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவிருப்பதால் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி என்னை தொடர்பு கொண்டு கூறினார். அதனால் நான் மீண்டும் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று தற்போது திடீர் பல்டி அடித்துள்ளார்.

    English summary
    MP MuthuKaruppan is going to resign his post today in the issue of Cauvery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X