திடீர் உடல்நலக் குறைவு.. முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதி!
லக்னோ: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் திடீர் உடலநலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக கடந்த 4 நாட்களுக்கு முன் டெல்லியை அடுத்த குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, உடனே அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென அவர் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டார். இதனால் அவர் மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவாக குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட பலரும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர்.