ராஞ்சியில் விமானம் மீது பறவை மோதல்... நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு... பயணிகள் தப்பினர்!!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து மும்பைக்கு வருவதற்கு புறப்பட்ட விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் புறப்படுவது தடை செய்யப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்.
கேரளாவில் நேற்று இரவு ஏற்பட்ட விமான விபத்தின் காயம் மறைவதற்கு முன்பு ராஞ்சியில் இன்று ஏற்படவிருந்த விமான விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. ராஞ்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் புறப்படுவதற்கு தயாரானது. அப்போது விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியது. உடனே விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் நிகழவிருந்த ஆபத்து தடுக்கப்பட்டது. விமானத்தில் 176 பயணிகள் இருந்ததாகவும், அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதில் பதிவு ஆகி இருக்கும் வாய்ஸ் ரெக்கார்டு மூலம் எந்த மாதிரியான விபத்து நடந்தது என்பது விசாரணைக்கு பின்னர் தெரிய வரும்.
இதுபோன்று விமானம் தரையிறங்கும்போது, புறப்படும்போது விமானத்தின் மீது பறவைகள் மோதுவது சகஜம்தான் என்றாலும், விமானத்தின் மீது பறவை மோதுவதன் மூலம் விமானம் சேதம் அடையும் என்பதால் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளப்படும்.
கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவருக்கு கொரோனா.. மீட்பு படையினருக்கு பரிசோதனை செய்வது கட்டாயம்
துபாயில் இருந்து நேற்றிரவு கேரள மாநிலத்தில் இருக்கும் கோழிக்கோடு வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் தரையிறங்கும்போது கன மழை பெய்து வந்த காரணத்தினால், நிதானம் இழந்து இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விமானம் இறங்கும்போது, வழுக்கி எதிரே இருந்த குழியில் விழுந்தது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது. 18 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.