For Daily Alerts
Just In
மும்பையில் இடிந்து விழுந்த 6 மாடி கட்டடம்: 11 பேர் பலி
இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக கருதப்படும் மும்பையில் ஒரு ஆறு மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 11 பேர் இறந்துள்ளனர்.
இன்று (புதன்கிழமை) இந்திய நேரப்படி 8.40 மணிக்கு இந்த குடியிருப்பு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
மேலும், கட்டட ஈடுபாடுகளுக்குள் சிக்கியுள்ள பலரை மீட்கும் பணியை மீட்பு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த பெண்டி பஜார் பகுதியில் உள்ள இந்த கட்டடம் 100 ஆண்டுகள் பழமையான கட்டடம் என்று நம்பப்படுகிறது.
ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வண்டிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் படை ஊழியர்கள் ஆகியோர் சம்பவம் நடந்த பகுதியில் மீட்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- 'இது ஆரம்பம்தான்': ஜப்பான் மீது பறந்த ஏவுகணை பற்றி வட கொரியா
- இலங்கை 'போர்க்குற்றம்': ஜகத் ஜெயசூர்ய மீது தென் அமெரிக்காவில் வழக்கு
- விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்த இசைக் கலைஞர்
Comments
English summary
At least 11 people have died and 24 others have been rescued after a building collapse in Mumbai.