For Quick Alerts
For Daily Alerts
Just In
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்ட்!
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மும்பையை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ்மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12000 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார்.
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நீரவ் மோடியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும் நீரவ் மோடி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடுகளை விசாரித்து வரும் மும்பை நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
Comments
nirav modi warrant mumbai court punjab national bank fraud நீரவ் மோடி வாரண்ட் மும்பை நீதிமன்றம் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு
English summary
Mumbai court issues warrant for Businessman Nirav Modi in Punjab National Bank fraud case.
Story first published: Tuesday, June 12, 2018, 19:00 [IST]