For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நள்ளிரவில் நிர்வாணப் பூஜை: ராதே மா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா மீது பிரபல டி.வி. நடிகை டோலி பிந்த்ரா அளித்த புகாரையடுத்து, அவர் மீது மும்பை போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். நள்ளிரவில் நிர்வாண பூஜை நடத்தியதாகவும், தன்னை நிர்வாணப்படுத்தி, பிற ஆடவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்ள அவர் தூண்டியதாகவும் டிவி நடிகை அளித்த புகாரில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

கையில் சூலாயுதம், லிப்ஸ்டிக், ஜிகு ஜிகு உடைகள் அணிந்து கொண்டு ஆசிர்வாதம் செய்வது... அரை டவுசர்-டி-ஷர்ட்டுடன் ஃபேஸ்புக்கில் ஒய்யாரமாக போஸ் கொடுப்பது என பரபரப்பை ஏற்படுத்தினார் பெண் சாமியார் ராதே மா. இவர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்துள்ளது மும்பை போலீஸ்.

இந்த நிலையில் இவரது தீவிர பக்தையாக இருந்து வந்த டோலி பிந்த்ரா (45) தனக்கு குழந்தை வரம் அருள்வதாக வாக்குறுதி அளித்திருந்த ராதே மாவின் மீது மும்பை போலீசாரிடம் கடந்த வாரம் திடுக்கிடும் புகார் தெரிவித்திருந்தார். பிக் பாஸ் தொடரில் தோன்றியதன் மூலம் பிரபலமடைந்த டோலி பிந்த்ரா(45), சில பாலிவுட் நாடகங்களிலும், சினிமாக்களிலும் நடித்துள்ளார். அவர் தனது புகரில் ராதே மா பற்றிய ரகசியங்களையும் வெளியிட்டுள்ளார்.

நள்ளிரவு பூஜை

நள்ளிரவு பூஜை

நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் ‘சத்சங்' நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருமாறு ராதே மா, தன்னை வற்புறுத்தியதாகவும் ‘செக்ஸ் பார்ட்டிகள்' போல நடைபெற்ற அந்த சத்சங் நிகழ்ச்சிகளின்போது, தன்னை நிர்வாணப்படுத்தி, பிற ஆடவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்ள அவர் தூண்டியதாகவும் மும்பை போலீசாரிடம் அளித்த புகாரில் டோலி பிந்த்ரா தெரிவித்திருந்தார்.

குழந்தை வரம்

குழந்தை வரம்

ஆண் பக்தர்களுடன் பேசும்போது, பஞ்சாபி மொழியில் ஆபாசமாக சங்கேத பாஷையில் பேசும் பழக்கம்கொண்ட ராதே மா, தனது கணவரையே அபகரிக்க முயன்றதாகவும் அந்தப் புகாரில் டோலி பிந்த்ரா குறிப்பிட்டிருந்தார்.

தயக்கம் காட்டியது ஏன்?

தயக்கம் காட்டியது ஏன்?

ராதே மா மீது இதுவரை ஏன் புகார் தெரிவிக்காமல் இருந்தீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பிந்த்ரா, எனக்கு நீண்ட காலமாக பிள்ளை பாக்கியம் கிட்டவில்லை. எனக்கு குழந்தை பிறக்க வழிசெய்கிறேன் என ராதே மா வாக்குறுதி அளித்திருந்ததால் அவர் மீது புகார் கூற நான் தயக்கம் காட்டி வந்தேன் என்று தெரிவித்தார்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

தற்போது, அவரது நிஜமுகத்தை நான் வெளிப்படுத்தி விட்டதால், போலீசில் நான் புகார் அளித்த நாளில் இருந்து எனக்கு கொலை மிரட்டல் அதிகரித்து வருகின்றது எனவும் டோலி பிந்த்ரா அந்த புகாரில் கூறியிருந்தார்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 294, 354, 506(2), 109, 120பி ஆகிய பிரிவுகளின்கீழ் ராதே மா மீது மும்பை போரிவில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக மும்பை வடக்குப் பகுதி கூடுதல் போலீஸ் கமிஷனர் ஃபதே சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.

English summary
The First Information Report was filed late on Tuesday evening following a complaint by Bigg Boss alumnus Dolly Bindra. Besides Radhe Maa, 19 others have been named in the case, which was registered at the Borivili police station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X