வானம் இப்படி பொத்துக்கிட்டு ஊத்துதே: ட்விட்டரில் கவலைப்படும் மும்பை மக்கள்
மும்பை: மும்பையில் கனமழை பெய்து வருவதால் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் #MumbaiRains(மும்பை மழை) என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
மும்பையில் விடியவிடிய கனமழை பெய்தது. காலையில் மழை நின்றுவிடும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். தொடர்ந்து பெய்து வரும் மழையால் மும்பை தெருக்கள் குளங்களாக மாறியுள்ளன. மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவியர் தவித்தனர்.
இந்நிலையில் மும்பை மக்கள் மழை பற்றி ட்விட்டரில் பேசி வருவதால் #MumbaiRains(மும்பை மழை) என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
|
லின்கிங் சாலை
மும்பை லிங்கிங் சாலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். வெள்ளம் தீவிரவமாக உள்ளது என முன்னிஷ் புரி ட்வீட் செய்துள்ளார்.
|
மும்பை
இது தான் மும்பைகாரர்களின் துணிச்சல்! #MumbaiRains என பாலிவுட் இயக்குனர் மாதுர் பந்தர்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
கார்
குதிரைக்கு பதிலாக நீங்கள் காருக்கு தண்ணீர் காட்டலாம், அதை குடிக்கவும் வைக்கலாம் என்று அஜீத் ராணாடே கிண்டல் செய்துள்ளார்.
|
மரைன் டிரைவ்
மரைன் டிரைவ் #MumbaiRains என்று மரைன் டிரைவ் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் குஷால் ஷா.
|
சர்வீஸ்
மழை கடவுளால் வாகனங்களுக்கு சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது என வாகனங்கள் வெள்ள நீரில் மூழ்கிய படத்தை வெளியிட்டுள்ளார் பிரமோத்.
|
இயல்பு வாழ்க்கை
மும்பையில் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை புகைப்படங்கள் மூலம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பாஸ்கர்.
|
வெள்ளம்
கனமழையால் வெள்ள நீர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பரேலில் நீர் புகுந்த வீட்டில் தத்தளிக்கும் குடும்பம் என விஜய் குமார் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.