இடுக்கி நிலச்சரிவு.. 7வது நாளாக நடக்கும் மீட்பு பணி.. பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு.. மூணாறில் சோகம்!
இடுக்கி: இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் இருக்கும் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை இன்னும் மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் ஒரு வாரமாக மீட்பு பணிகள் நடக்கிறது.
ஆனால் இன்னும் அங்கு உடல்களை மீட்கும் பணி முழுமையாக முடியவில்லை. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்கள் 90% பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை
பலி எண்ணிக்கை
தற்போது இடுக்கியில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் அங்கு உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மழை காரணமாக மீட்பு பணிகள் செய்வதும் கடினமாக இருக்கிறது. அங்கு இருக்கும் ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு மொத்தமாக வழியில் இருந்த வீடுகளை மண் மூடியது.
எத்தனை வீடுகள்
மொத்தம் 30 வீடுகள் வழியில் இருந்தது. எல்லாம் தமிழர்கள் வசிக்கும் வீடுகள் ஆகும். இவர்கள் அங்கு தொட்ட தொழிலார்களாக இருக்கிறார்கள். இந்த வீடுகள் எல்லாம் மொத்தமாக மணல் மூடியது. இதில் 70 பேர் வரை மணலுக்கு உள்ளே சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பலி எண்ணிக்கை
மூணாறில் நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.இன்று அதிகாலை மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் இன்னும் 16 உடல்கள் சிக்கி உள்ளது. இவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
தமிழர்கள் எப்படி
இந்த நிலச்சரிவில் இதுவரை 30 தமிழர்கள் பலியாகி உள்ளனர். பலர் இன்னும் உள்ளே சிக்கி உள்ளனர். இவர்கள் ஆழமான இடத்தில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளது. இரவு முழுக்க பெய்த மழையால் மீட்பு பணிகள் தாமதம் ஆகியுள்ளது .