காஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொலை.. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல்.. பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்
காஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல் என பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: காஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல் என பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள 'ரைசிங் காஷ்மீர்' பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி.
50 வயதான இவர் நேற்று தனது அலுவலகத்தில் இருந்து காரில் லால்சவுக் என்ற இடத்தில் நடைபெறும் இப்தார் விருந்துக்காக சென்றுகொண்டிருந்தார்.
சம்பவ இடத்திலேயே பலி
அப்போது அவரது கார் மீது மர்மநபர்கள் சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சுஜாத் புகாரியும், ஒரு பாதுகாப்பு அதிகாரியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காஷ்மீர் முதல்வர் கண்டனம்
இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியார்களை சந்தித்தார்.
கோழைத்தனமான செயல்
அப்போது அவர் பேசியதாவது, ‘ ஜம்மு-காஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல். பத்திரிக்கையாளர் சுஜாத் புஹாரி கொல்லப்பட்டது வருத்தம் அளிக்கிறது.
விரைவில் தடுக்கப்படும்
பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது. பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல்கள் விரைவில் தடுக்கப்படும். இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.