For Daily Alerts
Just In
இன்று பக்ரீத் - புத்தாடை அணிந்து வாழ்த்துக்களைப் பரிமாறி இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்
டெல்லி: இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் இன்று நாடு முழுவதும் கொண்டாடப் பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருவதையொட்டி, இஸ்லாமியர்கள் அனைவரும் புதிய ஆடை அணிந்து, தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெறுகின்றன. பெரும்பாலான பகுதிகளில் உள்ள முஸ்லீம்கள் தங்கள் உறவினர்கள், அண்டை வீட்டார், ஏழை எளிய மக்களுக்கு ஆடு மற்றும் இறைச்சியை பகிர்ந்து உண்டு மகிழ்கின்றனர்.
கேரளா உள்ளிட்ட சில இடங்களில் நேற்று பக்ரீத் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
The muslim are celebrating bakrid festival today by giving kurbani. On behalf of bakrid special mass prayers had been conducted in many places in Chennai.
Story first published: Monday, October 6, 2014, 12:17 [IST]