மைசூர் தசரா யானைகளுக்கு ரூ.32 லட்சத்தில் இன்சூரன்ஸ்
மைசூர்: மைசூரில் புகழ் பெற்ற தசரா விழாவில் பங்கேற்க உள்ள யானைகளுக்கு ரூ.32 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. மைசூர் நகரிலுள்ள சாமுண்டீஸ்வரி தேவி கோயிலில் நடைபெறும் தசரா விழா உலக பிரசித்தி பெற்றது. விஜயதசமி நாளில், அம்மன் திருவுருவ சிலையை அர்ஜுனா யானை சுமந்து செல்ல பிற 11 யானைகள் பின்னால் கம்பீரமாக அணி வகுத்து செல்லும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.
[Must Read: இன்னொரு யானைக்கும் கண்டிப்பாக இன்சூரன்ஸ் தேவை, எது தெரியுமா]
இப்படிப்பட்ட தசரா விழாவில் பங்கேற்கும் 12 யானைகளுக்கும் யுனைட்டட் இந்தியா நிறுவனம் மூலம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. யானைகளுக்கு காயம் ஏற்பட்டாலோ, அல்லது யானைகளால் ஏதேனும் பொருட்களுக்கோ பிறருக்கோ சேதம் ஏற்பட்டாலும், இந்த இன்சூரன்ஸ் மூலம் இழப்பீடு கிடைக்கும்.
பாகன்களுக்கும் கூட இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. யானைகளுகக்கு ரூ.32 லட்சத்துக்கும், பாகன்களுக்கு ரூ.35 லட்சத்துக்கும், இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.