For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாக்பூர்-மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது: 10 நாட்களில் 4வது விபத்து

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: நாக்பூர் மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிராவில் உள்ள டிட்வாலா அருகே தடம் புரண்டது.

Nagpur Mumbai Duronto Express derails at Maharashtra

நாக்பூர் மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டிட்வாலா அருகே இன்று காலை 6.30 மணிக்கு தடம் புரண்டது. ரயிலின் 5 பெட்டிகள் மற்றும் என்ஜின் தடம் புரண்டது.

image

துரந்தோ எக்ஸ்பிரஸ் வாசிந்த் மற்றும் அசான்காவ்ன் ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது. இந்த சம்பவத்தால் யாரும் உயிர் இழந்ததாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.

மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் நான்கு ரயில்கள் தடம்புரண்டுள்ளன. கடந்த 25ம் தேதி உள்ளூர் மும்பை ரயிலின் 6 பெட்டிகள் மாஹிம் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதில் 5 பயணிகள் காயம் அடைந்தனர்.

முன்னதாக கடந்த 19ம் தேதி உத்கல் எக்ஸ்பிரஸ் உத்தர பிரதேச மாநிலம் கடோலி அருகே தடம்புரண்டதில் 24 பேர் பலியாகினர், 156 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Nagpur Mumbai Duronto Express has derailed near Titwala. The incident at Maharashtra took place on the wee hours of Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X