நாக்பூர்-மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது: 10 நாட்களில் 4வது விபத்து
மும்பை: நாக்பூர் மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிராவில் உள்ள டிட்வாலா அருகே தடம் புரண்டது.
நாக்பூர் மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டிட்வாலா அருகே இன்று காலை 6.30 மணிக்கு தடம் புரண்டது. ரயிலின் 5 பெட்டிகள் மற்றும் என்ஜின் தடம் புரண்டது.
துரந்தோ எக்ஸ்பிரஸ் வாசிந்த் மற்றும் அசான்காவ்ன் ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது. இந்த சம்பவத்தால் யாரும் உயிர் இழந்ததாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.
#UPDATE Maharashtra: 5 coaches & engine of Nagpur Mumbai Duronto Express derailed near Titwala, some injured, rescue team rushed from Kalyan pic.twitter.com/OHEBrrdZE8
— ANI (@ANI) August 29, 2017
மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் நான்கு ரயில்கள் தடம்புரண்டுள்ளன. கடந்த 25ம் தேதி உள்ளூர் மும்பை ரயிலின் 6 பெட்டிகள் மாஹிம் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதில் 5 பயணிகள் காயம் அடைந்தனர்.
#WATCH: Five coaches & engine of Nagpur Mumbai Duronto Express derailed near Titwala in Maharashtra. pic.twitter.com/9u0adLF1rG
— ANI (@ANI) August 29, 2017
முன்னதாக கடந்த 19ம் தேதி உத்கல் எக்ஸ்பிரஸ் உத்தர பிரதேச மாநிலம் கடோலி அருகே தடம்புரண்டதில் 24 பேர் பலியாகினர், 156 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.