கோவாவில் அடுத்த மாதம் நரேந்திர மோடி தலைமையில் தேர்தல் பிரசார கூட்டம்
பனாஜி: கோவாவில் அடுத்த மாதம் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையில் கோவா மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறுகிறது என்று அம்மாநில பாரதீய ஜனதா தலைவர் வினய் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் மோடி தலைமையில் 100 பொதுக்கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக கோவாவில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
கோவாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கட்சி கூட்டத்திலேயே மோடி பாஜகவில் முன்னிலைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக ஜனவரி மாதம் இரண்வாது வாரம் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.