For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியும், அமித்ஷாவும் மும்முனை கொண்ட "திரிசூலத்தை" கொண்டு எதிர்க்கட்சியை தாக்குகின்றனர்.. காங்கிரஸ்

Google Oneindia Tamil News

குவாஹாத்தி: எதிர்க்கட்சியினரை தாக்க அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை ஆகிய திரிசூலத்தை பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் பயன்படுத்தி வருகின்றனர் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் எதிரிகளை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் புதிய ஆயுதத்தை கண்டறிந்துள்ளனர்.

Narendra Modi , Amitshahji, Trishul will attack you one day, says Jairam Ramesh

அதுதான் திரிசூலம். திரிசூலத்திற்கு 3 முனைகள் உள்ளன. அவை அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ ஆகும். இந்த 3 முனைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் செயலில் இருவரும் ஈடுபடுகின்றனர்.

அரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் பாஜக அரசை காங்கிரஸ் எதிர்க்கிறது. அதனால் அவர்கள் மேற்கண்ட ஆயுதத்தை கொண்டு பழி வாங்குகின்றனர். ஒரு நாள் அந்த திரிசூலமே இருவரையும் தாக்கும் என்றார் ரமேஷ்.

English summary
Congress senior leader Jairam Ramesh says that Narendra Modi and Amitshahji have found a "trishul" to attack their enemies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X