ஆட்சியைத் தக்க வைக்கும் மமதா பானர்ஜி.. மோடி வாழ்த்து
கொல்கத்தா: மேற்கு வங்கம்: மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி உறுதியாகிவிட்டதையடுத்து பிரதமர் நரேந்திரமோடி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தெலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 211 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக கூட்டணி அமைத்த காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி பின்னடைவை சந்தித்து உள்ளது. காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி 69 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
பாரதீய ஜனதா 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று உள்ளது.
தனித்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் 214 தொதிகளில் முன்னிலையில் உள்ளது. அந்த கட்சி மேலும் சில தொகுதிகளில் முன்னிலை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அவருடைய இந்த சிறந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தொடங்கவுள்ள மம்தா பானர்ஜிக்கு தனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.