மோடி ஒரு பொய்யர், மைனாரிட்டி மக்கள் அவரைப் பார்த்து பயப்படுகின்றனர்: மாயாவதி
டெல்லி: பாஜகவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி ஒரு போய்யர் என்றும், அவரைப் பார்த்து சிறுபான்மையினர் பயப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் பகுஜன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் மாயாவதி.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பகுஜன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் மாயாவதி. அப்போது அவர் கூறியதாவது:-
நரேந்திர மோடி கூறுவதில் சிறிய அளவிலேதான் உண்மை இருக்கிற்து.பெரும்பாலனவை பொய்தான். மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.நாட்டின் அடுத்த பிரதமராக விடாமல் அவரை தடுக்க கடும் முயற்சிகள் நாங்கள் மேற்கொள்வோம்.
சிறுபான்மையின மக்கள் அவரை பார்த்து பயபடுகின்றனர்.ஒருவேளை அவர் பிரதமரானால் முஸ்லீம்கள் தாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளனர்.சிறுபான்மையின மக்களாகிய நாம் அவரை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்.
அதேபோல், மூன்றாவதுஅணி மற்றும் பிற அணிகளால் நாட்டிற்கு எதையும் செய்ய முடியாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.