மோடிக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்: சரத் பவார் காட்டம்
ஜல்னா(மகாராஷ்டிரா): குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவர் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய சரத் பவாவர், அர்த்தமற்ற விஷயங்களை மோடி பேசி வருகிறார். அதனால் அவருக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியால்தான் இந்த நாடு விடுதலை பெற்றது. காங்கிரஸின் தியாகம். சுதந்திர போராட்டம் பற்றி மோடிக்கு என்னதான் தெரியும்? குஜராத்தில் 2002ஆம் ஆண்டு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஹசன் ஜாப்ரி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை நிகழ்ந்த இடம் அகமதாபாத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குல்பர்க்காவில்தான்..
ஆனால் அங்கு மோடி செல்லவே இல்லை.. அவர்களைப் பற்றி மோடி கவலைப்படவே இல்லை.. மோடி இந்த நாட்டுக்கு பேராபத்தானவர். என்றார்.