சிங்கப்பூர் பயணம்.. தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பிரதமர் மோடி..!
இந்திய பிரதமர் மோடியின் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் குறித்து சிங்கப்பூர் பத்திரிகைகளில் பல்வேறு தலைப்புகளில் செய்திகள் வந்துள்ளது.
சிங்கப்பூர்: இந்திய பிரதமர் மோடியின் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் குறித்து சிங்கப்பூர் பத்திரிகைகளில் பல்வேறு தலைப்புகளில் செய்திகள் வந்துள்ளது.
பிரதமர் மோடி, தற்போது கிழக்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார். அதன் முதற்கட்டமாக அவர் இந்தோனேசியா சென்றார்.
இந்த நிலையில் தற்போது மோடி சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் சென்ற மோடி, இன்று காலை அந்நாட்டின் பிரதமர் லீ செய்ன் லாங்கை சந்தித்து உரையாடினார். அதன்பின் அந்நாட்டின் அதிபர் ஹலீமா யாக்குப்பை சந்தித்து உரையாடினார்.
மோடி தற்போது மூன்றாவது முறையாக சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த சந்திப்பு புவியியல் ரீதியாக பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் சிங்கப்பூர் செய்திகளில் எல்லாம் இந்த செய்தி தலைப்பு செய்தியாக வந்தது.
டுடே ''இருதரப்பு உறவுகளை பாராட்டிய பிரதமர் லீ மற்றும் பிரதமர் மோடி'' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதே பத்திரிக்கையின் இன்னொரு கட்டுரையில் '' சிங்கப்பூர் எப்போதும் ஊக்குவிக்கும் நகரமாக இருந்துள்ளது- மோடி'' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
ஸ்ட்ரைட் டைம்ஸ் ''சிங்கப்பூரும் இந்தியாவும் எதிர்காலத்தில் ஒன்றாக பயணிக்க வேண்டும் - மோடி'' என்று தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதே பத்திரிக்கையில் ''இருநாட்டு உறவுகளை பலப்படுத்த மூன்றாவது முறையாக சந்திப்பு நடத்தும் இந்தியா சிங்கப்பூர்'' என்றுள்ளது.
'' இந்த சந்திப்பிற்கு பின் 30க்கும் மேற்பட்ட பொருட்களின் விலையை இருநாடுகளும் குறைக்க உள்ளது'' என்று பிசினஸ் டைம்ஸ் தலைப்பு வெளியிட்டுள்ளது.