இதே உத்வேகம், அர்ப்பணிப்புடன் 5-ஆவது ஆண்டில் செயல்படுவோம்- மோடி
இதே உத்வேகம், அர்ப்பணிப்புடன் 5-ஆவது ஆண்டில் செயல்படுவோம் என்று மோடி தெரிவித்தார்.
Recommended Video
டெல்லி: இதே உத்வேகம், அர்ப்பணிப்புடன் 5-ஆவது ஆண்டில் செயல்படுவோம் என்று நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தற்போது இந்த ஆட்சி 5 ஆவது ஆண்டாக தொடர்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றித் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள இரு தொடர் பதிவுகளில் அவர் கூறுகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக எங்கள் பயணத்தை தொடங்கினோம். கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் அனைத்து குடிமகன்களும் அளித்த ஒத்துழைப்பு காரணமாக வளர்ச்சி என்பது ஆற்றல் மிகுந்து பேரியக்கமாக மாறியுள்ளது.
On this day in 2014, we began our journey of working towards India’s transformation.
— Narendra Modi (@narendramodi) May 26, 2018
Over the last four years, development has become a vibrant mass movement, with every citizen feeling involved in India's growth trajectory. 125 crore Indians are taking India to great heights!
125 கோடி இந்தியர்கள் இந்தியாவை மிகப் பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.பாஜக மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு தலை வணங்குகிறேன். இந்த அன்பும் ஆதரவும்தான் ஒட்டுமொத்த பாஜக அரசின் வலிமை மற்றும் ஊக்கத்திற்கு காரணம்.
I bow to my fellow citizens for their unwavering faith in our Government. This support and affection is the biggest source of motivation and strength for the entire Government. We will continue to serve the people of India with the same vigour and dedication.
— Narendra Modi (@narendramodi) May 26, 2018
மக்களின் ஆதரவால்தான் மத்திய அரசு வலிமையாக செயல்பட முடிகிறது. இதே உத்வேகம் , அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5-ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் என்று மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.