முஸ்லீம்களை ஒழித்துக்கட்ட விரும்புகிறார் மோடி: ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டு
காஷ்மீர்: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி நாட்டில் உள்ள முஸ்லீம்களை ஒழித்துக்கட்ட விரும்புகிறார் என்று மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அவர்(மோடி) இனவாத அரசியல் செய்கிறார். அவரை எதிர்த்து போராட காங்கிரஸ் தயாராக உள்ளது. அவர் நாட்டில் உள்ள முஸ்லீம்களை ஒழித்துக்கட்ட விரும்புகிறார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் சைபுத்தீன் சோஸ் கூறுகையில்,
மோடி அலையில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் சிந்தித்து பார்க்க வேண்டும். அவர் மீடியாவுக்காக மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக அண்மையில் ஒரு செய்தி வெளியானது. தொலைக்காட்சி சேனல்களில் அத்வானி, ராகுல் காந்தி அல்லது சோனியா காந்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்காமல் மோடிக்கு மட்டும் ஏன்? இதை எல்லாம் தேர்தல் ஆணையம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.