For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாத்மா காந்தி நினைவு தினம் – நினைவிடத்தில் பிரணாப், மோடி, சோனியா மலரஞ்சலி

Google Oneindia Tamil News

டெல்லி: மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் தேசத்தந்தைக்கு அஞ்சலி செலுத்தினர்.

டெல்லி, ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மலரஞ்சலி செலுத்தினார். அதேபோல பிரதமர் நரேந்திர மோடியும் அஞ்சலி செலுத்தினார்.

Nation pays homage to Mahatma…

மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், "மரியாதைக்குரிய மகாத்மா காந்திக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில்

மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை கழகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

English summary
The nation on Friday pays homage to Mahatma Gandhi on his death anniversary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X