For Daily Alerts
Just In
கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்ட கபடி வீராங்கனையை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்
டெல்லி: கான்பூரில், தன்னைக் கிண்டல் செய்த இளைஞர்களைத் தட்டிக் கேட்ட கபடி வீராங்கனையை அவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் டோலி சிங். இந்திய கபடி அணியின் முக்கிய வீராங்கனை ஆவார். இவர் ஏஎன்ஐக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில், 'ஜூன் 12ம் தேதி என்னை 10 அல்லது 12 இளைஞர்கள் முகத்தை துணியால் மூடிக் கொண்டு சரமாரியாக தாக்கினர். என்னைப் பற்றி அவதூறாகவும் பேசினர்.
அவர்கள் என்னைக் கிண்டல் செய்ததை நான் தட்டிக் கேட்டதைத் தொடர்ந்து இவ்வாறு மோசமாக நடந்து கொண்டனர். எனக்கு இதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.
Comments
English summary
Indian women kabaddi player Dolly Singh was allegedly manhandled by a group of boys in Kanpur after complaining for their behaviour.