ஒடிஷா முதல்வராக தொடர்ந்து 4வது முறையாக நாளை பதவி ஏற்கும் நவீன் பட்நாயக்
புவனேஸ்வர்: பிஜு ஜனதாதள தலைவரான நவீன் பட்நாயக் ஒடிஷாவின் முதல்வராக நான்காவது முறையாக நாளை பதவியேற்கிறார்.
நடந்து முடிந்த ஒடிஷா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சி மொத்தம் உள்ள 147 இடங்களில் 117 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து ஒடிஷா முதல்வராக நவீன் பட்நாயக் தொடர்ந்து நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் நாளை முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார். பட்நாயக்குடன் சேர்ந்து புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் நாளை பதவியேற்கவிருக்கிறார்கள்.
பட்நாயக் தனது அமைச்சரவையில் பழைய முகங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, சில புதுமுகங்களை சேர்ப்பார் என்று கூறப்படுகிறது. அவரது அமைச்சரவையில் யார், யார் இடம்பெறப் போகிறார்களோ என்று ஒடிஷாவில் கணிக்கத் துவங்கிவிட்டனர்.