ஆம் ஆத்மி, காங்.க்கும் பெப்பே... புதிய கட்சியை தொடங்கினார் சித்து! #Sidhu
சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து ஆவாஸ் இ பஞ்சாப் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
"Aawaaz-e-Punjab" poster says the front to "raise voice against those who have destroyed Punjab" pic.twitter.com/0tAT0OMQiD
— ANI (@ANI_news) September 2, 2016
இதனிடையே பாஜக எம்.பியான நவ்ஜோத் சிங் சித்து திடீரென பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் தேர்தலில் தம்மை முதல்வர் வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவிக்காததால் இந்த முடிவை சித்து எடுத்தார்.
இதனால் அவர் ஆம் ஆத்மி அல்லது காங்கிரஸ் கட்சியில் சேரக் கூடும் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆவாஸ் இ பஞ்சாப் என்ற புதிய அரசியல் கட்சியை சித்து தொடங்கியுள்ளார். இது பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.