கோவாவில் கடற்படையின் மிக் ரக விமானம் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு
பனாஜி: கோவா அருகே கடற்படையின் மிக் கர விமான விபத்துக்குள்ளானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவா அருகே கடற்படைக்கு சொந்தமான மிக் 29 கே விமானம் வழக்கமான பயிற்சியில ஈடுபட்டிருந்தது. அப்போது கோவாவின் வாஸ்கோ என்ற இடத்திலிருந்து சென்ற போது திடீரென விமானம் விபத்தில் சிக்கியது.
விமானத்தின் பைலட் அந்த விமானத்தை சாதுர்யமாக தரையிறக்கினார். 10.30 மணிக்கு நடந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
FLASH.
— SpokespersonNavy (@indiannavy) February 23, 2020
Today morning at around 1030h a Mig 29k aircraft on a routine training sortie crashed off Goa. The pilot of the aircraft ejected safely and has been recovered. An enquiry to investigate the incident has been ordered.@DefenceMinIndia @SpokespersonMoD
பறவை கூட்டங்களின் மீது விமானம் மோதியதால் விபத்துக்குள்ளாகியிருக்கும். அதனால் என்ஜினில் தீப்பிடித்து விபத்து நேர்ந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அந்த விமானத்தை இயக்கிய பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதே போல் கடந்த நவம்பர் மாதம் கோவாவின் தபோலிம் என்ற இடத்தில் வழக்கமான பயிற்சியின் போது புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.