கமாண்டோ வீரர்கள் சென்ற வாகனம் மீது நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்.. 16 பேர் பலி
கட்சிரோலி: மகாராஷ்டிர மாநிலத்தில் நக்சல்கள் திடீரென நடத்தியுள்ள வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி என்ற இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. நக்சல்களின் தாக்குதலில் 10 கமாண்டோ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், போலீஸ் வாகனம் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியானது
16 பேர் கொண்ட கமாண்டோக்கள் குழு ஒன்று போலீஸ் வாகனத்தில் சென்ற போது, அவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் தற்போது நக்சல்களின் தாக்குதலில் காயமடைந்த 16 பேர் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது
#UPDATE Maharashtra: 10 security personnel injured in an IED blast by naxals in Gadchiroli. The blast was executed by naxals on a police vehicle which was carrying 16 security personnel. pic.twitter.com/PXBJaqPuF1
— ANI (@ANI) May 1, 2019
இதனிடையே தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினருக்கும் - நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#UPDATE Official sources: 10 security personnel have lost their lives in an IED blast by Naxals in Gadchiroli. #Maharashtra https://t.co/KB3rT3XOLK
— ANI (@ANI) May 1, 2019