For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட்டில் நக்சல்களிடையே மோதல்- ஒருவர் பலி

By Mathi
Google Oneindia Tamil News

லதேகர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் இயக்கத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியாகி உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேகர் பகுதியில் நக்சலைட்டுகளுக்கு ஜார்க்கண்ட் ஜன்முக்தி மோர்ச்சா மறும் திரிதியா பிரஸ்துதி கமிட்டி ஆகிய ஆயுத குழுக்கள் ஆதரவாக இயங்கி வருகின்றன.

திரிதியா பிரஸ்துதி கமிட்டியினர் கடந்த சனிக்கிழமையன்று இரவு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அந்த அமைப்பின் 40 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் 70 பேர் திடீரென திரிதியா பிரஸ்துதி கமிட்டியினரை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இத்துப்பாக்கிச் சண்டையில் திவாகர் சிங் என் நக்சலைட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஏராளமான கால்நடைகள் இம்மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

English summary
One Naxal of Jharkhand Janmukti Morcha (JJMP) has been killed by the rival outfit of Tritiya Prastuti Committee (TPC) in Chudia village in Latehar district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X