முன்னாள் உ.பி. முதல்வர் என்.டி.திவாரி மரணம்
Recommended Video
டெல்லி: முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் என்.டி. திவாரி டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 93.
இந்தியாவிலேயே இரு மாநிலங்களின் முதல்வராக இருந்த ஒரே தலைவர் திவாரி மட்டுமே. உ.பி. மட்டுமல்லாமல் உத்தரகாண்ட் மாநில முதல்வராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
தனது பிறந்த நாளின்போதே என்.டி. திவாரி மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் மரணமடைந்தார்.
1925ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி பிறந்தவர் என்.டி.திவாரி. உ.பி. முதல்வராக 1976 முதல் 77 வரையிலும், 84 முதல் 85 வரையிலும் பின்னர் 88 முதல் 89 வரையிலும் இருந்துள்ளார். 2002 முதல் 2007 வரை உத்தரகாண்ட் முதல்வராக இருந்தவர் திவாரி.
தீவிர அரசியலை விட்டு விலகிய பின்னர் அவர் 2007ம் ஆண்டு ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு பெண்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கி 2009ல் பதவியை விட்டு நீக்கப்பட்டார்.
ராஜீவ் காந்தி அமைச்சரவையில் அவர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் 1986 முதல் 87 வரை பணியாற்றியுள்ளார்.