வட கிழக்கைக் கைப்பற்றுகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி: ஏபிபி சர்வே
Recommended Video
டெல்லி: வட கிழக்கு மாநிலங்களில் பெரிய அளவிலான வெற்றி வருகிற லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு காத்திருப்பதாக ஏபிபி சர்வே தெரிவித்துள்ளது.
ஏபிபி சிவோட்டர் இணைந்து நடத்திய மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் வட கிழக்கில் பாஜக கூட்டணிக்குப் பெரிய வெற்றி காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ஏபிபி சர்வே: சிவசேனா கைவிட்டால் பாஜக காலி... மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு ஏறுமுகம்!]
#देशकामूड: Lotus blooming in the northeastern states with the BJP-led NDA expected to get 18 out of 25 seats if 2019 Lok Sabha elections were held today. pic.twitter.com/ABEUUnGGWI
— ABP News (@abpnewstv) October 4, 2018
அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக கூட்டணிக்கு 18 இடங்கள் கிடைக்குமாம்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 6 இடங்களே கிடைக்கும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஒரு இடம் மற்றவர்களுக்கு.