For Quick Alerts
For Daily Alerts
Just In
பாக். உடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது.. பழிக்கு பழி வாங்கி ஆகனும்.. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே
டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக பழிக்குப் பழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் உத்தவ் தாக்கரே கூறியதாவது:
பாகிஸ்தானுக்கு எதிராக பழிக்கு பழி கொள்கையை கடை பிடிக்க வேண்டும். நம்மிடம் அவர்கள் நன்றாக இருந்தால் நாமும் அவர்களிடம் நன்றாக இருக்க வேண்டும்.
அவர்கள் பிரச்சினையை கிளப்பினால், அவர்களுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தானோடு கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
மோடி ஆட்சியில் பங்கு பெறுமா என்பது குறித்து பாரதிய ஜனதாவும் சிவசேனாவும் பேசவில்லை.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.
Comments
English summary
The Narendra Modi government should adopt an aggressive tit-for-tat policy towards Pakistan and should teach it a lesson if it creates trouble for India, NDA constituent Shiv Sena said on Monday.