For Daily Alerts
Just In
நாகாலாந்தில் ஆட்சி அமைக்க என்டிபிபி உரிமை கோரியது
நாகாலாந்தில் ஆட்சி அமைக்க என்டிபிபி உரிமை கோரியுள்ளது.
கோஹிமா: நாகாலாந்தில் ஆட்சி அமைக்க அழைக்குமாறு தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி (என்டிபிபி) ஆளுநர் ஆச்சார்யாவிடம் உரிமை கோரியுள்ளது.
நாகாலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணி 27 இடங்களில் வென்றுள்ளது. நாகா மக்கள் முன்னணியை எதிர்த்து என்டிபிபி- பாஜக போட்டியிட்டன. இந்த கூட்டணி மொத்தம் 29 இடங்களில் வென்றன.
ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏக்கள் தேவை. இந்த நிலையில் என்டிபிபி தலைவர் நெய்பு ரியோ ஆளுநர் ஆச்சார்யாவை இன்று நேரில் சந்தித்தார். அப்போது ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார் ரியோ.
இதர கட்சிகள் ஆதரவுடன் நாகாலாந்தில் என்டிபிபி-பாஜக கூட்டணி அரசு அமைய இருக்கிறது.
Comments
English summary
NDPP today staked claim to form the Govt in Nagaland.
Story first published: Sunday, March 4, 2018, 13:36 [IST]