நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு! நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றே வெளியானது!
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Recommended Video
டெல்லி: நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 6 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் இருந்து 1.07 லட்சம் பேரும் நாடு முழுவதும் 13 லட்சம் பேரும் இந்த தேர்வை எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
|
மனிதவள மேம்பாட்டுத்துறை
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்றே அறிவிக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
முன்கூட்டியே வெளியீடு
இதைத்தொடர்நது நீட் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் ஒன்றரை மணி நேரம் முன்னதாக 12.30 மணிக்கே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பதிவெண் கொண்டு
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் தங்களின் ரோல் நம்பரை வைத்து தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து வழக்குகள்
தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. அடுத்தடுத்து வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன்கூட்டியே தேர்வு முடிவை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.