நீட் கருணை மதிப்பெண் தீர்ப்பு: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தற்போது சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்ய உள்ளது .
Recommended Video
டெல்லி: நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தற்போது சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்ய உள்ளது .
தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். 49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றம் சென்று இருக்கிறது.மதுரை ஹைகோர்ட் கிளை தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தற்போது சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்து உள்ளது. நாளை மனுதாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இன்றே மேல்முறையீடு செய்து இருக்கிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் டி.கே ரங்கராஜன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால் தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று டி.கே ரங்கராஜன் மனுவில் கோரியுள்ளார்.