நீட்: தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கூடாது.. உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று டெல்லி உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
Recommended Video
டெல்லி: நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று டெல்லி உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை ஹைகோர்ட் கிளை தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ செய்த மேல்முறையீடு வழக்கில் இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளது. தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை நேற்று தீர்ப்பு வழங்கியது.
இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தீர்ப்பு வரும்வரை மாணவர்கள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன பிரச்சனை
நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளது.இந்த பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தீர்ப்பு வழங்கினார்கள்
இதை மதுரை ஹைகோர்ட் கிளை விசாரித்தது. 49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
எதிர்ப்பு தெரிவித்தது
இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றம் சென்றது இருக்கிறது.மதுரை ஹைகோர்ட் கிளை தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நாளை சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது .இதற்காக உச்ச நீதிமன்றத்தில் டி.கே ரங்கராஜன் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
என்ன தீர்ப்பு
இந்த நிலையில் நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று டெல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை ஹைகோர்ட் கிளை தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ செய்த மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு கூடுதல் கருணை மதிப்பெண் எதுவும் வழங்கப்படாது.