டெல்லி என்கவுன்ட்டர்: 3 குற்றவாளிகள் பலி
டெல்லி: டெல்லியில் நள்ளிரவில் காவல்துறையினருடன் நடந்த மோதலில், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி உட்பட மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நீட்டு டபோடியா என்ற குற்றவாளியைப் பற்றித் துப்புக் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு கிடைத்த ரகசிய தகவலின்படி, சிறப்புப்படை போலீசார் அவரைப் பிடிப்பதற்காக வசந்த் கன்ச் என்ற இடத்திற்கு சென்றனர்.
அங்கு மறைந்திருந்த மூன்று பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். சரணடையுமாறு போலீசார் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே காவல்துறையினர் மீது குற்றவாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்புக்காக போலீசார் திருப்பிச் சுட்டதில் நீட்டு டபோடியாவும், அவருடன் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்தனர்.நள்ளிரவில் நடந்த இந்த எண்கவுண்டர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.