For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிம்லாவில் பெற்றோரை நிர்வாணமாக்கி கொடூரமாகக் கொன்றவருக்கு தூக்கு

By Siva
Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பெற்றோரை நிர்வாணமாக்கி அவர்களை படுகொலை செய்த நேபாளத்தைச் சேர்ந்த வாலிபருக்கு மரண தண்டனை கிடைத்துள்ளது.

நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் மான் பாதூர்(60). அவரது மனைவி பார்வதி(56). அவர்களின் மகன் ஓம் பர்காஷ்(25). அவர்கள் அனைவரும் இமாச்சல பிதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்காய் பகுதியில் வசித்து வந்தனர். பாதூரும் அவரது மனைவியும் வயலில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஓம் பர்காஷ் தனது தந்தையை நிர்வாணமாக்கி அவரது மர்ம உறுப்பை அறுத்து அவரை கொடூரமாகக் கொன்றார்.

பின்னர் தாயையும் நிர்வாணமாக்கி கொன்றார். இதை பார்த்து அதிர்ந்த தனது மனைவியையும், உறவுக்காரப் பெண்ணையும் அவர் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டார். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து தகவல் கிடைத்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது இரண்டு உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பர்காஷை கைது செய்தனர். அவர் எதற்காக கொலை செய்தார் என்பது கடைசி வரை தெரியவில்லை. இந்த வழக்கு சிம்லாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பல்தேவ் சிங் பர்காஷுக்கு மரண தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டார்.

English summary
A 25-year-old Nepali who stripped his elderly parents before brutally murdering them has been sentenced to death by a court in Shimla. "The incident was inhumane in its form besides being a highly brutal act of crime," Sessions Judge Baldev Singh said on Wednesday while sentencing Om Parkash to death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X