இங்கிலாந்து ராணுவ விசாரணையில்தான் கொல்லப்பட்டார் நேதாஜி- திடுக் தகவல்
நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்கிறது புதிய புத்தகம்; இங்கிலாந்து ராணுவ விசாரணையில்தான் அவர் கொல்லப்பட்டார் என்கிறது அப்புத்தகம்.
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை; இங்கிலாந்தின் ராணுவ விசாரணையிலே அவர் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார் என புதிய புத்தகத்தில் திடுக்கிடும் தகவல் இடம்பெற்றுள்ளது.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந் தேதி விமான விபத்தில் நேதாஜி இறந்தார் என கூறப்படுகிறது. ஆனாலும் நேதாஜியின் மரணம் தொடர்பாக மர்மம் நீடித்து வருகிறது.
1945-ம் ஆண்டுக்குப் பின்னரும் நேதாஜி உயிருடன் இருந்தார்; மேற்கு வங்கத்துக்கு வந்து சென்றார் என்பதற்கான ஆவணங்களை மேற்கு வங்க மாநில அரசு வெளியிட்டிருந்தது. மத்திய அரசும் இதேபோல் நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பக்ஷி "Bose: The Indian Samurai - Netaji and the INA Military Assessment" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் குண்டுவீச்சில் தப்பிய நேதாஜி சைபீரியாவில் முகாம் அமைத்தர். அங்கு 3 வானொலி நிலையங்களையும் நேதாஜி அமைச்சர்.
இதை இங்கிலாந்து ராணுவம் அறிந்து கொண்டது. ரஷ்யாவின் உதவியுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் இங்கிலாந்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போதுதான் நேதாஜி கொல்லப்பட்டார்.
இவ்வாறு அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.