ஆஹா.. அதுக்குள்ள பிரியா வாரியருடன் ராகுலை சேர்த்து கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்களே!
பிரியா வாரியரின் கண்ணடிக்கும் படத்துடன் ராகுல்காந்தி கண்ணடிக்கும் படத்தை நெட்டிசன்கள் ஒப்பீடு செய்தனர்.
டெல்லி: மலையாள நடிகை பிரியா வாரியரின் கண்ணடிக்கும் படத்துடன் ராகுல் காந்தி மக்களவையில் கண்ணடித்த படத்தை நெட்டிசன்கள் ஒப்பீடு செய்தனர்.
மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு ராஷ்ட்ரீய கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீது இன்றைய தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது ராகுல் பேசிய போது பிரதமர் என் கண்ணைப் பார்த்து பேசவேண்டும், ஆனால் அதை தவிர்க்கிறார், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்று பேசினார்.
பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளையும் ராகுல் காந்தி முன்வைத்தார். அனல் பறந்த அவரது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் அமளி ஏற்பட்டது. இதனால் சபையை சிறிது நேரம் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்துசென்று மோடியின் அருகே சென்று அவரைத் திடீரென கட்டி அணைத்தார். மோடியின் ராகுலை தட்டிக் கொடுத்தார்.
பின்னர் தனது இருக்கைக்கு வந்த ராகுல் காந்தி, அருகேயிருந்த உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருந்ததோடு, கண்ணடித்தார். கேரள நடிகை பிரியா வாரியரை போல ராகுல் கண்ணடித்ததாக, சமூக வலைத்தளங்களில் ஒப்பீடு ஆரம்பித்துள்ளது.
'ஒரு அடார் லவ்' என்ற மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் கண்ணடிக்கும் ஸ்டைல் மூலம் பிரபலமாகினார். இந்நிலையி்ல ராகுலின் படத்தையும் பிரியா வாரியரின் படத்தையும் போட்டு நெட்டிசன்கள் யார் இதில் பெஸ்ட் என கேட்டு விவாதிக்கின்றனர்.