For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அவரே' சொல்லிட்டாரு, லீவு கொடுங்க.. மும்பை ஆபீஸ் ஹெச்.ஆர்களுக்கு காத்திருக்கு சோதனை #MumbaiRains

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: மகிந்திரா கம்பெனி சேர்மன் ஆனந்த்தே படத்தோட சொல்லிவிட்டார், எனக்கு லீவு கொடுங்க என்று, மும்பையிலுள்ள ஆபீஸ்களுக்கு விடுமுறை விண்ணப்பங்கள் பறக்கப்போவது உறுதியாகிவிட்டது.

எதிர்பாராத கன மழையால் ஸ்தம்பித்து நிற்கிறது மும்பை. பஸ், ரயில் மட்டுமில்லாமல், விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் மும்பையிலிருந்து இன்று டெல்லிக்கு அலுவலக மீட்டிங்கிற்காக செல்ல வேண்டிய மகிந்திரா நிறுவன சேர்மன் ஆனந்த் மகிந்திரா, அதை ரத்து செய்துள்ளார். மும்பையில் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டுள்ளதாக படத்தோடு டிவிட் செய்துள்ளார்.

Netizens got idea after seeing Anand Mahindra Tweet

ஆனால் இதையும் தங்கள் சொந்த லாபத்திற்கு பயன்படுத்த முடியும் என்று நினைத்து களமிறங்கிவிட்டனர் நெட்டிசன்கள். ஆனந்த் மகிந்திரா வெளியிட்ட டிவிட்டின்கீழேயே ஒரு நெட்டிசன் இதை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், "நன்றி சார்.. எங்கள் ஹெச்.ஆரிடம் இதை காண்பித்து, விடுமுறை கேட்டுக்கொள்வேன்" என்று தெரிவித்துள்ளார். ஆனந்த்துக்கே அந்த நிலைமை என்றால் எங்க நிலைமை என்ன சார் என்று கூறி விடுமுறை விண்ணப்பங்கள் குவியத்தான் போகிறது மும்பையில்.

English summary
Netizens got idea to take leave after seeing Anand Mahindra Tweet who said, he has cancelled his trip to Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X