For Daily Alerts
Just In
உ.பி- யில் புதிய வரி... கேட்டா நீங்களே ஆச்சரியப்படுவீங்க
Recommended Video
பசுக்களைப் பாதுகாக்க தனி வரி வாங்கும் உத்தரபிரதேசம்- வீடியோ
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பசு பாதுகாப்பு நல வரி என புதிதாக வரி வசூலிக்கப்பட உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பசு பாதுகாப்பு நல வரி என 0.5% வரி மக்களிடம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.
மேலும், கிராம பஞ்சாயத்து அளவில், தேவையான தீவனம், கொட்டகை மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய, 750 கோசாலைகள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக, 16 மாநகராட்சிகளுக்கு தலா, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் கோசாலைகள் அமைக்கப்படுவதை கண்காணித்து, அதிகாரிகள் அறிக்கை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
English summary
The Cabinet meeting headed by Chief Minister Yogi Adityanath has decided to charge 0.5 per cent tax payers as cow Wealth