சிறுவனுடன்.. கல்யாணம் ஆன பெண்ணுக்கு கள்ள உறவு.. செருப்பு மாலை அணிவித்து.. ஊர்மக்களின் வினோத தீர்ப்பு
கள்ள உறவு கொண்ட பெண்-சிறுவனுக்கு பஞ்சாயத்தார் நூதன தண்டனை தந்தனர்
Recommended Video
கர்னால்: 16 வயது சிறுவனுடன் கள்ள உறவு வைத்திருந்து இருக்கிறார் கல்யாணம் ஆன பெண் ஒருவர்.. இந்த விஷயம் அறிந்த பஞ்சாயத்தார், ரெண்டு பேருக்கும் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் அழைத்து வந்திருக்கிறார்கள்!
வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.
அதனால் நிறைய கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் கூடி தீர்ப்புகள் சொல்லப்பட்டுதான் வருகின்றன. அப்படிதான் இப்போதும் ஒரு காதல் விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
காதல் விவகாரம்.. ஹாஸ்டலில் நேபாள மாணவர் தற்கொலை.. கோவை வேளாண் பல்கலையில் பரபரப்பு!
அரியானா, கர்னால் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், சிறுவனுடன் கள்ள உறவு வைத்திருந்து இருக்கிறார். இந்த பெண் கல்யாணம் ஆனவர். குழந்தைகளும் உள்ளனர். ஆனால் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் தவறான உறவு இருப்பதை ஊர் மக்கள் கண்டுபிடித்தனர். இருவருமே வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பஞ்சாயத்தால், முதலில் மாணவனை கொலை செய்யவே பிளான் பண்ணினார்கள். பின்னாடி வம்பாகிவிடும் என்பதால், இருவரையும் சரமாரியாக வெளுத்தெடுத்தனர். பிறகு இருவருக்கும் செருப்பு மாலை போட்டு, ஊரெல்லாம் வலம் வர செய்தனர்.
இறுதியில், 2 பேரையும் ஊரைவிட்டே ஒதுக்கியும் வைத்தனர். இந்த விஷயம் போலீசாருக்கு தெரிந்ததும், ஊருக்குள் வந்து விசாரிக்க வந்தனர். ஆனால் பஞ்சாயத்தார் ஒருத்தரும் ஊருக்குள் இல்லை.. எல்லாம் எஸ்கேப் ஆகி ஜாமீன் கேட்டு வருகிறார்கள் என்று தெரிகிறது. எனினும் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.